Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2370 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2370மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – ஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி – ஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி – இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் – 89
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, – தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே,மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.
முடிந்த பொழுதில் சூற வாணர், Mudintha Pozhudhil Soora Vaanar - மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
எனம் படிந்து உழு சால், Enam Padinthu Uzhu Saal - காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே
பை தினைகள் வித்த, Pai Thinaihal Vitha - புதிய தினைவிதைகளை விதைக்க
தடிந்து, Thadinthu - அறுத்துப்போட்ட பின்பும்
எழுந்த, Ezhunth - (நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த
வேய்ங்கழை, Veyngazhai - மூங்கில் தடிகளானவை
போய், Poi - மேலேசென்று
விண் திறக்கும், Vin Thirakkum - ஆகாசத்தை யளாவப்பெற்ற
வேங்கடம், Vengadam - திருவேங்கடம்
மேல் ஒருநாள், Mel Orunaal - முன்பொருநாள்
தீம் குழல், Theem Kuzhal - மதுரமான புல்லாங்கிழலை
வாய் வைத்தான், Vaai Vaiththaan - தருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய
சிலம்பு, Silambu - திருமலையாம்.