| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2371 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே – ஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் – இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார் 90 | சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா றலம்பிய சேவடிபோய், அண்டம் – புலம்பியதோள் எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ, வண்டுழாய் மாலளந்த மண். | சிலம்பும், Silambum - (திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும் செறி கழலும், Seri Kazhalum - செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும் சென்று இசைப்ப, Sendru Isaippa - எங்கும் ஒலிக்க விண் ஆறு, Vin Aaru - ஆகாசகங்கையிலே அலம்பிய, Alambiya - விளக்கப்பட்ட கே அடி, Ke Adi - திருவடிகளானவை அண்டம் போய், Andam Poi - அண்டபித்தியளவும் நீண்டு போனபோது, புலம்பிய, Pulampiya - (அனைவராலும்) துதிக்கத் தக்க தோள், Thol - திருத்தோள்கள் எண் திசையும் சூழ, En Thichaiyum Soozha - எட்டுத் திசைகளையும் வியாபிக்க இடம் போதாது, Idam Podhathu - இடம் போராவில்லை, கண் துழாய் மால், Kan Thuzhai Maal - அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான் அளந்த, Alandha - அளந்துகொண்ட மண், Man - பூமியானது என் கொல், En Kol - (சிறியதே போலும்) |