| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2372 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார் அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர் அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் – சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் – அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் – 91 | மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன். | வயிற்றினோடு ஆற்ற மகன், Vayittrinodu Aatra Magan - வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன் மண் உண்டும், Man Undum - (பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்) பேய்ச்சி, Peychchi - பூதனையினது முலை, Mulai - (நஞ்சு தீற்றின) முலையை உண்டும், Undum - அமுது செய்தும் ஆற்றதாய், Aatrathai - த்ருப்தி பெறாதவனாய் வெண்ணெய், Vennai - வெண்ணெயை விழுங்க, Vizhunga - (களவு செய்து) விழுங்கின வளவிலே ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டி வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு கண்ணி கயிற்றினால், Kannni Kayittrinai - பல முடிச்சுகளை யுடைய தாம்பினால் கட்ட, Katta - உரைக்கக்கட்டிப் போட, தான், Thaan - ஸர்வசந்தனான தான் கட்டுண்டு இருந்தான், Kattundu Irundhaan - (அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான் |