| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2373 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் – அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று புத்தி பண்ணு -என்கிறார் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் — 92 | மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், மகனா மவன்மகன்றன் காதல் – மகனை சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே நிறைசெய்தென் நெஞ்சே. நினை. | என் நெஞ்சே, En Nenchae - எம் மனமே! ஒருவற்கு மகன் அல்லாத, Oruvarukku Magan Alladha - (கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப்பிறந்தத் தகாத (ஸர்வலோக பிதாவான) மா மேனி, Maa Meeni - சிறந்த திருமேனியையுடைய மாயன், Maayan - ஆச்சர்யபூதனாய் மகன் ஆமவன், Magan Aamavan - (வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய் மகன் தன், Mahan Than - தனது மகனான பிரத்யும்நனுடைய காதல் மகனை, Kaadhal Mahanai - இஷ்ட குமாரனான ஆநிருத்தாழ்வானை சிறை செய்த, Sirai Seidha - சிறையிலேவைத்த வாணன், Vaanan - பாணாஸுரனுடைய தோள், Thol - தோள்களாயிரத்தையும செற்றான், Setraan - அறுத்தொழித்தவனான பெருமானுடைய கழலே, Kazhale - திருவடிகளையே நிறை செய்து, Nirai Seidhu - பூர்த்தியாக நினை, Ninai - சிந்தை செய்வாயாக |