| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2374 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும் நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – 93 | நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை, உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து. | நெஞ்சே, Nenchae - ஓமனமே! நீண்ட, Neenda - (முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து திருமால், Thirumaal - ச்ரிய பதியானவனும் கனைத்து உலவு வௌளத்து, Kanaiththu Ulavu Voulathu - கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி, Orpillai Aayi Anaiththu Ulagum Ulodukki - ஒப்பற்ற சிறு குழந்தையாய் அனைத்து உலகும, Anaiththu Ulagum - உலகங்களை யெல்லாம் உள் ஒடுக்கி, Ul Odduki - திருவயிற்றினுள்ளே அடக்கி ஆல் மேல், Aal Mael - ஆலந்தளிரின் மேலே மெள்ள துயின்றானை, Mella Thuyinraanaai - மெள்ள சயனித்துக்கொண்டவனுமான பெருமானை உய்த்து, Uyuthu - சாரணாக அநுஸந்தித்து உள்ளத்தே வை,, Ullaththae Vai - தியானிக்கக் கடவாய் உலகில், Ulagil - இவ்வுலகில் நினைத்து, Ninaiththu - (அப்பெருமானை) அநுஸந்தித்து ஆர் தெளிவார், Aar Thelivaar - தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை) |