| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2375 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் – கீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் – இப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட ஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் – இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் – 94 | உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி, வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து, பொன்றாமை மாயன் புகுந்து, | உய்ந்து உணர்வு என்னும், Uyinthu Unarvu Ennum - விவேக வுண்ச்சியாகிற ஒளி கொள் விளக்கு, Oli Kol Vilakku - உஜ்வலமான தீபத்தை ஏற்றி, Aetri - ஏற்றி அவனை நாடி வைத்து, Avanai Naadi Vaiththu - அவ்வெம்பெருமானைத் தேடிப்பிடித்து வலைப்படுத்தேன், Valaipadutthen - ஸ்வாதீனப்படுத்திக்கொண்டேன் மாயன், Maayan - அப்பெருமான் பொன்றாமை, Ponraamai - குறைவின்றி என் நெஞ்சத்து, En Nenchatthu - என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து, Pugundhu - வந்துசேர்ந்து மெத்தென, Meththena - மெதுவாக நின்றான், Nindraan - (முதலில்) நின்றான் இருந்தான், Irundhaan - (பிறகு) வீற்றிருந்தான், கிடந்தான், Kidandhaan - (அதன் பிறகு) பள்ளிகொண்டருளினான். |