Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2376 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2376மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் – 95
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.
அந்தி புகுந்து, Andhi Pugundhu - ஸாயங்காலமானது வந்துசேர்ந்து
இலங்கும் பொழுதத்து, Ilankum Pozhudhatthu - விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவ்வதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம், Ikazhndha Iraniyanathu Aagam - நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யா ஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து, Sukirndhu - பலகூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த, Engum Sintha - (ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த, Pilandha - பிளந்தொழித்த
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
திருஅடியே, Thiruvadie - திருவடிகளையே
என்நெஞ்சமே, Ennenjamai - எனது மனமே!
வந்தித்து வாழ்த்து, Vandhithu Vazhththu - தலையார வணங்கி வாயாக வாழ்த்து