| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2378 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் – அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் – இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் – 97 | அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, மலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட் கெண்ணத்தா னாமோ இமை. | அலர் எடுத்த உத்தியான், Alar Eduththa Uththiyaan - தாமரைப்பூ ஓங்கி யிருக்கப்பெற்ற திருநாபியை யுடையவனும் எழிலாய மலர் எடுத்த, Ezhilaaya Malar Eduththa - அழகிய காயம் பூப்போன்ற மா மேனி, Maa Meeni - சரிய திருமேனியை உடையனுமான மாயன், Maayan - எம்பெருமான் அவர் எடுத்த வண்ணத் தான், Avar Eduththa Vannath Thaan - காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன மா மலரான், Maa Malaran - தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன என்ற இவர்கட்கு, Endra Ivangadku - ஆகிய இத்தேவர்கட்கு இமை, Imai - சற்றேனும் எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ |