| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 238 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5 | அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5 | தெய்வம்,Deivam - தேவர்களுக்கு தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய் கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற வாய்,Vaai - (தன்) அதரத்தை கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல் எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான) கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |