| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2380 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் – ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் – 99 | தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் தாள்முதலே நங்கட்குச் சார்வு. | தொட்ட, Thotta - ஏந்தின படை எட்டும், Padai Ettum - எட்டு திவ்யாயுதங்களாலும் தோலாத, Tholaadha - தோல்வியடையாத வென்றியான், Vendriyaan - ஜயசீலனும் அட்டபுய காத்தான், Attapuy Kaaththaan - கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும் அந்நான்று, Annanru - முன்பொருகாலத்தில் குட்டத்து, Kuttaththu - நீர்ப் பொய்கையிலே கோள் முதலை துஞ்ச, Kol Muthalai Thunja - மிடுக்குடைய முதலை முடியும்படியாக குறித்து எறிந்த சக்கரத்தான், Kuriththu Erintha Chakkaraththaan - இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது தாள் முதலே, Thaal Mudhale - பாதமூலமே நங்கட்கு, Nangadku - எங்களுக்கு சார்வு, Saarvu - பரமப்ராப்யம் |