| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2381 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் – 100 | சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு. | சக்கரத்தான், Chakkaraththaan - திருவாழியைக் கையிலே உடையவனும் தண் துழாய் தார் வாழ், Than Thuzhai Thaar Vaal - குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற வரை மார்பன் தான், Varai Maarban Thaan - மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால் முயங்கும், Muyankum - ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய் கார் ஆர்ந்த வான், Kar Arnta Van - மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே அமரும், Amarum - நிலைத்து நிற்கக் கூடியதான மின், Min - மின்னல்போல இமைக்கும், Imaykkum - விளங்குகின்றவளாய் வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற நெடு, Netu - நீண்ட கண், Kan - திருக்கண்களை யுடையளாய் தேன் அமரும் பூமேல், Ten Amarum Pumel - தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான திரு, Thiru - பெரிய பிராட்டியார் நமக்கு என்றும் சார்வு, Namakku Enrum Carvu - நமக்கு எப்போதும் சரணம். |