| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 239 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6 | மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை வெண்ணெய்,Vennei - வெண்ணெயை மிடறு,Midaru - கழுத்திலே மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய் பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை செய்து,Seidhu - செய்து கொண்டு இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும் திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே இடற,Idara - தட்டித் திறியும்படியாக கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |