Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 24 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
24ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2
முத்தும்,Muttum - முத்துக்களையும்
மணியும்,Maniyum - ரத்நங்களையும்
வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும்
நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து
தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே
எங்கும்,Engum - திருமேனி யெங்கும்
மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள
பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும்
ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை
காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்!
வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்!