திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 24 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
24பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2
பதவுரை Show / Hide
முத்தும்,Muttum - முத்துக்களையும்
மணியும்,Maniyum - ரத்நங்களையும்
வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும்
நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து
தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே
எங்கும்,Engum - திருமேனி யெங்கும்
மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள
பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும்
ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை
காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்!
வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்!