| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 240 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7 | வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7 | புள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை வள்ளி,Valli - கொடி போன்று துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள இடை,Edai - இடையை யுடைய மாதர்,Maadhar - இடைப் பெண்கள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி) அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய் வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே |