| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 241 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8 | பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8 | என் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம் வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப யான்,Yaan - (தாயாகிய) நான் என்,En - என்னுடைய இள,Ela - குழைந்திரா நின்றுள்ள கொங்கை,Kongai - முலையிலுண்டான அமுதம்,Amudham - பாலை ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து எடுத்து,Eduthu - வளர்த்து புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி) பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கானில்,Kaanil - காட்டிலே கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |