Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 243 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
243ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை
கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10
என்றும்,Endrum - எப்போதும்
எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு
இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய்
என்,En - என்னுடைய
மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி
கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்,Sol - அருளிச் செய்த
பொன்,Pon - பொன் மயமாய்
திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள
மாடம்,Maadam - மாடங்களை யுடைய
புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய
இன்,En - போக்யமான
தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம்.