| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 243 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10 | என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10 | என்றும்,Endrum - எப்போதும் எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய் என்,En - என்னுடைய மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை சொல்,Sol - அருளிச் செய்த பொன்,Pon - பொன் மயமாய் திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள மாடம்,Maadam - மாடங்களை யுடைய புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய இன்,En - போக்யமான தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம். |