| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 246 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3 | காடுகள் ஊடு போய்,Kaadugal Oodu Poi - (பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து மறி ஓடி,Mari Odi - (கன்றுகள் கை கழியப் போகாத படி) (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - (அக்) கன்றுகளை மேய்த்து கார் கோடல் பூ சூடி,Kaar Koadal Poo Soodi - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு வருகின்ற,Varugindra - (மீண்டு) வருகின்ற தாமோதரா,Thaamotharaa - கண்ணபிரானே! உன் உடம்பு,Un Udambu - உன் உடம்பானது கன்று தூளி காண்,Kanru Thooli Kaan - கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்; மயில் பேடை,Mayil Paedai - பெண் மயில் போன்ற சாயல்,Saayal - சாயலை யுடைய பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மாணாளா,Maanalaa - வல்லபனானவனே! நீராட்டு அமைத்து வைத்தேன்,Neeraattu Amaithu Vaithen - (இந்த உடம்பை அலம்புவதற்காக) நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்; ஆடி,Aadi - (ஆகையால் நீ) நீராடி அமுது செய்,Amudhu Sei - அமுது செய்வாயாக; உன்னோடு உடனே,Unnodu Udane - உன்னோடு கூடவே உண்பான்,Unbaan - உண்ண வேணுமென்று அப்பனும்,Appanum - (உன்) தகப்பனாரும் உண்டிலன்,Undilan - (இதுவரை) உண்ணவில்லை. |