Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 249 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
249ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6
அம் சுடர்,Am sudar - அழகிய ஒளியை யுடைய
ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை
கை அகத்து,Kai akathu - திருக் கையிலே
ஏந்தும்,Aendum - தரியா நின்றுள்ள
அழகா,Azhagaa - அழகப் பிரானே!
நீ;,Nee - நீ;
பொய்கை,Poigai - (காளியன் கிடந்த) பொய்கையிலே
புக்கு,Pukku - போய்ப் புகுந்து
பிணங்கவும்,Pinangavum - (அவ் விடத்தில்) சண்டை செய்த போதும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்,Naan uyir vaazndhu irundhen - நான் ஜீவித்திருந்தேன்;
என் செய்ய,En seyyya - ஏதுக்காக
என்னை,Ennai - என்னை
வயிறு மறுக்கினாய்,Vayiru marukkinai - (இப்படி) வயிறு குழம்பச் செய்கின்றாய்;
ஏது ஓர் அச்சம் இல்லை,Aethu or achcham illai - (உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே;
காயாம் பூ வண்ணம் கொண்டாய்,Kaayaam poo vannam kondai - காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே!
கஞ்சன்,Kanjan - கம்ஸனுடைய
மனத்துக்கு,Manaththukku - மநஸ்ஸுக்கு
உகப்பனவே,Ugappanave - உகப்பா யுள்ள வற்றையே
செய்தாய்,Seythaay - செய்யா நின்றாய்.