Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 25 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
25ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3
பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3
பணை,Panai - மூங்கில்போன்ற
தோள்,Thol - தோள்களை யுடையளாய்
இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய
பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற
கொங்கை,Kongai - முலையை
அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர,Aara - வயிறு நிரம்ப
உண்டு,Undu - (பாலை) அமுது செய்து
கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய
இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த
காலில்,Kaalil - திருவடிகளில்
வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்!
காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!!