திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 25 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
25பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3
பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும் கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3
பதவுரை Show / Hide
பணை,Panai - மூங்கில்போன்ற
தோள்,Thol - தோள்களை யுடையளாய்
இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய
பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற
கொங்கை,Kongai - முலையை
அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர,Aara - வயிறு நிரம்ப
உண்டு,Undu - (பாலை) அமுது செய்து
கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய
இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த
காலில்,Kaalil - திருவடிகளில்
வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்!
காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!!