| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 251 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும் ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8 | கேசவா,Kesavaa - கண்ணபிரானே! கேட்டு அறியாதன,Kaettu ariyaadhana - (உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை கேட்கின்றேன்,Kaetkinraen - (இன்று) கேட்கப் பெற்றேன்; கோவலர்,Kovalara - (அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;) கோபாலர்கள் இந்திரற்கு,Indirarku - இந்திரனைப் பூஜிப்பதற்காக காட்டிய,Kaattiya - அனுப்பிய சோறும்,Soruma - சோற்றையும் கறியும்,Kariyuma - (அதுக்குத் தக்க) கறியையும் தயிரும்,Thairuma - தயிரையும் உடன் கலந்து,Udan kalandhu - ஒன்று சேரக் கலந்து உண்டாய் போலும்,Undaai poolum - உண்டவனன்றோ நீ; ஊட்ட,Ootta - (இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை) (நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க) முதல் இலேன்,Mudhal ilaen - கைம் முதல் எனக்கில்லை; உன் தன்னை கொண்டு,Un thannai kondu - உன்னை வைத்துக் கொண்டு ஒரு போதும்,Oru pothum - ஒரு வேளையும் எனக்கு அரிது,Enakku aridhu - என்னால் ஆற்ற முடியாது; வாட்டம் இலா,Vaattam ilaa - (என்றும்) வாடாத புகழ்,Pugazh - புகழை யுடைய வாசு தேவா,Vaasu Devaa - வஸுதேவர் திருமகனே! இன்று தொட்டும்,Indru thottum - இன்று முதலாக உன்னை,Unnai - உன்னைக் குறித்து அஞ்சுவன்,Anjuvan - அஞ்சா நின்றேன். |