| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 253 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம் செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10 | புற்று,Putru - புற்றிலே (வளர்கின்ற) அரவு,Aravu - பாம்பின் படத்தை ஒத்த அல்குல்,Alkul - அல்குலை உடையளாய் அசோதை,Asothai - யசோதை யென்னும் பெயரை யுடையளாய் நல்,Nal - (பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான ஆய்ச்சி,Aaychi - ஆய்ச்சியானவள் தன் புத்திரன்,Than Puthiran - தன் மகனான கோவிந்தனை,Govindanai - கண்ணபிரானை கன்று இனம் மேய்த்து வரக் கண்டு,Kanru Inam Maeythu Varak Kandu - கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு உகந்து,Ugandhu - மன மகிழ்ந்து அவள்,Aval - அவ் யசோதை கற்பித்த,Karpitha - (அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)நியமித்துக் கூறிய மாற்றம் எல்லாம்,Maatram Ellaam - வார்த்தைகளை யெல்லாம்; செற்றம் இலாதவர்,Setram Ilaadhavar - அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ் தரு,VaaL Tharu - வாழுமிடமான தென்,Then - அழகிய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை கற்று,Katru - (ஆசார்ய முகமாக) ஓதி பாட வல்லார்,Paada Vallaar - (வாயாரப்) பாட வல்லவர்கள் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய கழல் இணை,Kalal Inai - திருவடி யிணைகளை காண்பார்கள்,Kaanbargal - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |