Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 256 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
256ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3
தோழன்மார்,Thozhanmaar - தன்னேராயிரம் பிள்ளைகள்,
சுரிகையும்,Surikaiyum - உடை வாளையும்
தெறி வில்லும்,Theri Villum - சுண்டு வில்லையும்
செண்டு கோலும்,Sendu Kolum - பூஞ்செண்டு கோலையும்
மேல் ஆடையும்,Mel Aadaiyum - உத்தராயத்தையும்
கொண்டு,Kondu - (கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக) கையிற்கொண்டு
ஓட,Oda - பின்னே ஸேவித்து வர,
ஒருவன் தன்,Oruvan Than - ஒரு உயிர்த் தோழனுடைய
தோளை,Tholai - தோளை
ஒரு கையால்,Oru Kaiyal - ஒரு திருக் கையினால்
ஊன்றி,Oonri - அவலம்பித்துக் கொண்டு
(ஒரு கையால்),(Oru Kaiyal) - மற்றொரு திருக் கையினால்
ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்,Aanirai Inam Meela Kuritha Sangam - (கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை
(ஊன்றி),(Oonri) - ஏந்திக் கொண்டு
வருகையில்,Varugaiyil - மீண்டு வருமளவில்
வாடிய,Vaadiya - வாட்டத்தை அடைந்துள்ள
பிள்ளை கண்ணன்,Pillai Kannan - ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய
மஞ்சளும் மேனியும்,Manjalum Maeniyum - பற்று மஞ்சள் மயமான திருமேனியையும்
வடிவும்,Vadivum - அவயவ ஸமுதாய சோபையையும்
அருகே நின்றான் என் பெண்,Arugae Nindraan En Pen - (அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்
கண்டாள்,Kandaal - (முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;
நோக்கி கண்டாள்,Nookki Kandaal - (பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்) கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;
அது கண்டு,Adhu Kandu - அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு
இ ஊர்,E Oor - இச்சேரியிலுள்ளவர்கள்
ஒன்று புணர்க்கின்றது,Ondru Punarugindrathu - (அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;
ஏ,Ae - இதற்கு என் செய்வது!