Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 258 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
258ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
சுற்றி நின்று ஆயர் தழைகளிடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்றொருவர்க்கு என்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால்
கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே–3-4-5
ஆயர்,Aayar - இடைப் பிள்ளைகள்
சுற்றி நின்று,Suttri Nindru - (தன்னைச்) சூழ்ந்து கொண்டு
தழைகள்,Thazhaigal - மயில் தோகைக் குடைகளை
இட,Eda - (தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர,
சுருள் பங்கி,Surul Pangi - (தனது) சுருண்ட திருக் குழல்களை (எடுத்துக் கட்டி)
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களாலே
அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு
ஆயர் கடைத்தலை பற்றி நின்று,Aayar Kadaithalai Patri Nindru - இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு
பாடவும் ஆடவும் கண்டேன்,Paadavum Aadavum Kandaen - பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்;
பின்,Pin - இனி மேல்
அன்றி,Andri - அவனுக்கொழிய
மற்று ஒருவற்கு,Matru Oruvarku - வேறொருவனுக்கு
என்னை பேசல் ஒட்டேன்,Ennai Paesal Ottaen - என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;
மாலிருஞ்சோலை,Malirunjcholai - (ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?) திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற
எம் மாயற்கு அல்லால்,Em Maayarukku Allaal - எனது தலைவனுக்கொழிய (மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)
இவள்,Eval - (ஆகையினால், தாய்மார்களே!) (நம் மகளான) இவள்
கொற்றவனுக்கு,Kottravanukku - அத் தலைவனுக்கே
ஆம்,Aam - உரியன்
என்று எண்ணி,Endru Enni - என்று நிச்சயித்து விட்டு
கொடுமின்கள்,Kodumingal - (அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்;
கொடீர் ஆகில்,Kodir Aagil - (அப்படி) கொடா விட்டீர்களே யானால்
கோழம்பமே,Kozhambamae - (உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.