திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2590 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2590பெரிய திருவந்தாதி || 6
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய் எஞ்செய்தா லென்படோம் யாம்?
பதவுரை Show / Hide
கண்ணனே, Kannane - எம்பெருமானே!
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ, Nerii Kaatti Ninpaal Neekuthiyo - கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)
கரு மா முறி மேனி காட்டுதியோ, Karum Maa Muri Meeni Kaattuthiyo - கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள், Mel Naal - அநாதி காலமாக
அறியோமை, Ariyomai - அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய், En Seivaan Enninai - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய், Eethu Uraiyaai - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால், En Seithal - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம், Yaam En Padom - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.