திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2591 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2591பெரிய திருவந்தாதி || 7
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த அம்மா!நின் பாதத் தருகு.
பதவுரை Show / Hide
பூ மேய, Poo Meyya - தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற
செம் மாதை, Sem Maathai - *ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து, Nin Maarvil Serivithu - உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
பார் இடந்த, Paar Idantha - (பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா, Amma - ஸ்வாமீ!
நின் பாதத்து அருகு, Nin Paadaththu Arugu - தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே, En Nenjinnaar Thaame - என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார், Anukkara Aayi Sarnthozhindhaar - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம், Aru Vinaiyom - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே, Yaame - நாங்கள் மாத்திரம்
சேயோம்., Seyyom - தூரத்திலிருக்கிறோம்.