திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2594 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2594பெரிய திருவந்தாதி || 10
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ்.
பதவுரை Show / Hide
இரு நால்வர், Iru Naalvar - அஷ்ட வஸுக்கவென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர், Eeraindhin Mel Oruvar - ஏகாதசருத்ரர் களென்ன
எட்டோடு ஒரு நால்வர், Ettodu Oru Naalvar - த்வாதசாதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால், Oru Irivar Allaal - அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம், Yaam - நாம்
திருமாற்கு, Thirumaarku - எம்பெருமானைப் பணிவதற்கு
வணக்கம் ஆர், Vanakkam Aar - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம், Ae Paavam - அந்தோ!;
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே!
நாமா, Naamaa - நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம், Miga Naazh Udayom - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.