Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 26 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
26ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 4
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4
உழந்தாள்,Uzhandhaal - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய
நறு நெய்,Naru nei - மணம் மிக்க நெய்யை
ஒரோ தடா,Oro thadaa - ஒவ்வொரு தடாவாக
உண்ண,Unna - (கண்ணன்) அமுது செய்த வளவில்
இழந்தாள்,Izhandhaal - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை
எரிவினால்,Erivinaal - வயிற்றெரிச்சலாலே
ஈர்த்து,Eerththu - கையைப் பிடித்திழுத்து
எழில் மத்தின்,Ezhil maththin - அழகிய மத்தினுடைய
பழ தாம்பால்,Pazha thaambaal - சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை
ஒச்ச,Ocha - (அடிப்பதாகக்) கையிலெடுக்க
பயத்தால்,Payaththaal - அச்சத்தாலே
தவழ்ந்தான்,Thavazhnthaan - (அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய
முழந்தான் இருந்த ஆ காணீரே,Muzhandhaan irundha a Kaanire - முழங்கால்களிருந்தபடியை காணீர்!
முகிழ் முலையீர் வந்து காணீரே,Mukhil mulaiyer vandhu kaanire - முகிழ்த்த முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!!