Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 260 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
260ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத் தாலணிந்து பல்லாயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் யயர்க்கின்றதே–3-4-7
சால பல் நிரை பின்னே,Saala Pal Nirai Pinnae - பற்பல பசுத் திரளின் பின்னே
தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற
காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே
தன்,Than - தன்னுடைய
திருமேனி,Thirumeni - திருமேனியானது
ஒளி திகழ நின்று,Oli Thigazha Nindru - பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்,Neelam - நீல நிறத்தை யுடைத்தாய்
நல் ,Nal - நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு,Naru - பரிமளம் வீசா நின்றுள்ள
குஞ்சி,Kunji - திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால்
அணிந்து,Anindhu - அலங்கரித்துக் கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே,Pal Aayar Kuzhaam Naduvae - பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர,Kolam Senthaamarai Kann Milira - அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று
குழல்,Kuzhal - வேய்ங்குழலை
ஊதி,Oodhi - ஊதிக் கொண்டும்
இசை,Esai - (அதுக்குத் தக்க) பாட்டுக்களை
பாடி,Paadi - பாடிக் கொண்டும்
குனித்து,Kuniththu - கூத்தாடிக் கொண்டும்
ஆயரோடு,Aayarodu - இடைப் பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற,Aaliththu Varugindra - மகிழ்ந்து வருகின்ற
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு,Azhagu - வடிவழகை
என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து
அயர்க்கின்றது,Ayarkkindrathu - அறிவு அழியாநின்றாள்.