திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2602 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2602பெரிய திருவந்தாதி || 18
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
பதவுரை Show / Hide
தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு
பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா, Viththa - ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு, Solla - நீயே சொல்லு.