திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2605 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2605பெரிய திருவந்தாதி || 21
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, காருருவன் தான்நிமிர்த்த கால்.
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு, Anku - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று
பார் உருவும், Par Uruvum - பூமியாகிறஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும், Par Valaitta Nir Uruvum - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய, Kan Pudaiya - மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால், Kar Uruvan Tan Nimirtta Kal - காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு, Anku Vem Narakil Cenru Ceramal Kappatarku - கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று, Inru - இப்போது
இங்கு, Inku - இவ்விடத்தில்
என் நெஞ்சால், En Nencal - என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட, Itakkunta - நெருக்குப்பட்டுக்கிடக்கின்றன.