திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2606 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2606பெரிய திருவந்தாதி || 22
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
பதவுரை Show / Hide
என் மனத்தே, En Manatte - எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார், Malal Kuti Pukunrar - திருமால் வந்து சேர்ந்துவிட்டார்;
வல் வினையார் தாம், Val Vinaiyar Tam - (இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வீற்றிருக்கும் இடம் காணாது, Virrirukkum Itam Kanadu - (இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
கால் பொத திரிந்து, Kal Pota Tirintu - கால் நோவத்திரிந்து அலைந்ததனால்
மேலால், Melal - முன்பெல்லாம்
தருக்கும், Tarukkum - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும், Itam Pattinotum - பெருமையோடே
இளைத்து, Ilaitthu - வருத்தமுற்று
இன்நாள், Innaal - இப்போது
கத்துவாரம், Kattuvaaram - கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும்.