திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2607 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2607பெரிய திருவந்தாதி || 23
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன், இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த, நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான், தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
பதவுரை Show / Hide
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள்
இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி
நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான், Thaan - அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும்
தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.