திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2609 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2609பெரிய திருவந்தாதி || 25
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான்.
பதவுரை Show / Hide
ஆரானும் ஆதானும் செய்ய, Aaraanum Aadaanum Seyya - யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து, Akal Idaththai Aaraindhu - விசாலமான இப்பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே, Adhu Thiruththal Aavadhe - அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான், Yaan - நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை, Seer Aar Manaththalai - (எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை, Van Thunbaththai - வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால், Vaanor Inam Thalaivan Kannanaal - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன், Maatrinen - நீக்கிக்கொண்டேன்.