| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2609 | பெரிய திருவந்தாதி || 25 | ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான். | ஆரானும் ஆதானும் செய்ய, Aaraanum Aadaanum Seyya - யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்; அகல் இடத்தை ஆராய்ந்து, Akal Idaththai Aaraindhu - விசாலமான இப்பூமியை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே, Adhu Thiruththal Aavadhe - அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ? யான், Yaan - நானோவென்றால் சீர் ஆர் மனத்தலை, Seer Aar Manaththalai - (எனது) சிந்த மனத்திலுள்ள வன் துன்பத்தை, Van Thunbaththai - வலிய துன்பங்களை வானோர் இனம் தலைவன் கண்ணனால், Vaanor Inam Thalaivan Kannanaal - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால் மாற்றினேன், Maatrinen - நீக்கிக்கொண்டேன். |