திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2610 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2610பெரிய திருவந்தாதி || 26
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர் இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த, அருளென்னும் தண்டால் அடித்து.
பதவுரை Show / Hide
ஓர்  இருள் தான் அன்ன மாமேனி, Oor Irul Thaan Anna Maameni - இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய
எம் இறையார், Em Iraiyaar - எம்பெருமான்
தந்த, Thanda - அளித்த
அருள் என்னும் தண்டால், Arul Ennum Thandhaal - க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல்வினையை, Valvinaiyai - கொடிய பாவங்களை
அடித்து, Adiththu - புடைத்து,
கானும் மலையும் புக, Kaanum Malaiyum Puga - (அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான், Kadivaan - தூரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், Yaanum En Nenjum Isainthozhindhom - நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.