திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2621 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2621பெரிய திருவந்தாதி || 37
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை.
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்))
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ;
அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்
மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால், Anbaal - பக்தியுடன்
கரமே, Karame - திண்ணமாக
அமை, Amai - ஊன்றியிரு.