திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2623 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2623பெரிய திருவந்தாதி || 39
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய், தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால் போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
பதவுரை Show / Hide
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு
ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய், Poy - பரமபதத்திலே சென்று
பொலிய, Poliya - நன்றாக
உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல்
அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற
வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு
பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ?
பேசாய், Pesai - நீ சொல்வாய்.