திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2632 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2632பெரிய திருவந்தாதி || 48
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, கொன்றானை யேமனத்துக் கொண்டு.
பதவுரை Show / Hide
அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம், Yaam - அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.