திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2636 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2636பெரிய திருவந்தாதி || 52
மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
பதவுரை Show / Hide
அஞ்ஞான்று, Ajnyaantru - முன்னொரு காலத்தில்
மாண், Maan - வாமாவேஷத்தை
பாவித்து, Paaviththu - பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான், Man Irandhaan - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன், Maayavan - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு, Nanju - (முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது, Oon Paaviththu Undaanathu - உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான திருமேனியை
காண்பான், Kaanbaan - ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா, Nam Kan Avaa - நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா, Mattru Ondru Kaan Uraa - வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான், Vaithaan - வாக்கானது
சீர் பரவாது, Seer Paravaadhu - (அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று, Ondru - வேறொன்றை (சோற்றை)
உண்ண, Unna - உண்பதற்கு
உறுமோ, Urumo - விரும்புமோ?