திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2638 | பெரிய திருவந்தாதி || 54 | வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு. | பதவுரை Show / Hideஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)) உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய தாள், Thaal - திருவடிகளை பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு) வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்; ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம் வானோ, Vaano - ஆகாசமோ? மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ? மாருரமோ, Maruramo - காற்றோ? தீயகமோ, Thiyakamo - நெருப்போ? கானோ, Kaano - காடோ? ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம். |