திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2638 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2638பெரிய திருவந்தாதி || 54
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், வன்துயரை யாவா! மருங்கு.
பதவுரை Show / Hide
ஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;))
உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள், Thaal - திருவடிகளை
பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ, Vaano - ஆகாசமோ?
மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ?
மாருரமோ, Maruramo - காற்றோ?
தீயகமோ, Thiyakamo - நெருப்போ?
கானோ, Kaano - காடோ?
ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம்.