திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2644 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2644பெரிய திருவந்தாதி || 60
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லைகாண் மற்றோர் இறை.
பதவுரை Show / Hide
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது, Perndhu Ondru Nookkathu - வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய், Een Thuzhai Maayanaiye Pinnirpai - போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய், Nillaappai - அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை, Tollai - அநாதியாய்
மா, Maa - பெரிதாய்
வெம், Vem - கடினமான
நரகில், Naragil - நரகத்திலே
சேராமல், Seramal - போய்ப்புகாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை, Perndhu Matru Oru Irai - வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண், Engum Illai Kaan - ஓரிடத்திலுமில்லைகிடாய்.