திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2647 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2647பெரிய திருவந்தாதி || 63
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன்.
பதவுரை Show / Hide
பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்))
திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது
மூக்கும், Mookkum - மூக்கையும்
பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும்
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான
பரன், Paran - ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.