திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2649 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2649பெரிய திருவந்தாதி || 65
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - வாராய்மனமே!
கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து
நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும்
தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும்
மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும்
குட்டு, Kuttu - ஸமர்ப்பி.