திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2650 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2650பெரிய திருவந்தாதி || 66
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே! அறிகண்டாய் சொன்னேன் அது.
பதவுரை Show / Hide
நெஞ்சை, Nenjai - ஓ மனமே!
சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின
மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும்
ஈட்ட, Eetta - திரண்ட
வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு;
அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.