திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2658 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2658பெரிய திருவந்தாதி || 74
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே! புடைதான் பெரிதே புவி.
பதவுரை Show / Hide
ஒரு நாள் ஒழியாமை, Oru Naal Ozhiyamai - ஒருநாளும் தப்பாமல்
என்றும், Endrum - எந்நாளும்
யான் இரந்தால், Yaan Irandhaal - அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார், Kundru Kudai Aaga Aa Kaatha Kovalanaar - (முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார், Ondrum Irangaar - சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார், Uru Kaattaar - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
புவி, Bhuvi - நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான், Peridhe Pudai Thaan - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?