| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 266 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3 | அம்,Am - அழகிய மை,Mai - மை அணிந்த தட,Thada - விசாலமான கண்,Kann - கண்களையும் மடம்,Madam - ‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய ஆய்ச்சியரும்,Aaychiyarum - இடைச்சிகளும் ஆன் ஆயரும்,Aan Aayarum - கோபாலர்களும் ஆநிரையும் ,Aanirayum - பசுக்கூட்டமும்ட்டமும் அலறி,Alari - (மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு எம்மை சரண் என்று கொள் என்று,Emmai Saran Endru Kol Endru - (‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று இரப்ப,Irappa - பிரார்த்திக்க, இலங்கு,Ilangu - (அவ்வேண்டுகோளின்படியே) விளங்கா நின்ற ஆழி,Aazhi - திருவாழி ஆழ்வானை கை,Kai - கையிலே உடையனாய் எந்தை,Endhai - எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான் எடுத்த,Edutha - (அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த மலை,Malai - மலையாவது (எது என்னில்?); கொம்மை புயம்,Kommai Puyam - பருத்த புஜங்களை யுடைய குன்றர்,Kunrar - குறவர்கள், தம்மை,Thammai - தங்களை சரண் என்ற,Saran Endra - சரணமென்று பற்றியிருக்கிற தம் பாவையரை,Tham Paavaiyarai - தங்கள் பெண்களை (கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து) புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று,Punam Meikindra Maan Inam Kaanmin Endru - ‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி) சிலை,Silai - (அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக) (தமது) வில்லை குனிக்கும்,Kunikkum - வளையா நின்றுள்ள |