திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2662 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2662பெரிய திருவந்தாதி || 78
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில் ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத வூணாக உண்.
பதவுரை Show / Hide
துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்))
நாள், Naal - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
நாளும், Naalum - நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்)  ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே!
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.