திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2663 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2663பெரிய திருவந்தாதி || 79
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே, விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் பேராயற் காளாம் பிறப்பு.
பதவுரை Show / Hide
மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக
மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ?