திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2664 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2664பெரிய திருவந்தாதி || 80
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும் இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம் ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான் பாதமே யேத்தாப் பகல்.
பதவுரை Show / Hide
பிறப்பு, Pirappu - பிறவியையும்
இறப்பு, Irappu - மரணத்தையும்
மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும்
பிணி, Pini - வியாதிகளையும்
துறந்து, Thurandhu - ஒழிந்து
பின்னும், Pinnum - அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும், Irakkavum - மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும், Inbu Udaithu Aam Aelum - ஆநந்தமுடையதான ஸநவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல், Man Alandhaan Paathame Aetthaa Pakal - உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம், Marappu Ellam - மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே, Edhame Endru Allal Ennavane - துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?