திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2670 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2670பெரிய திருவந்தாதி || 86
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான், பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, என்நினைந்து போக்குவரிப் போது.
பதவுரை Show / Hide
கார் கலந்த மேனியான், Kaar Kalanda Meniyaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான், Kai Kalanda Azhiyaan - கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான், Paar Kalanda Val Vayitran - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான், Paambu Anaiyaan - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து, Seer Kalandhu - திருக்குணங்கள் நிரம்பிய
சொல், Sol - ஸ்ரீஸூக்திகளை
நினைந்து, Ninaindhu - அநுணுந்தித்து
சூழ்வினையின் ஆழ் அவரை போக்கார் எம், Sozhvinainin Aazh Avarai Pokkaar Em - கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போகுவர், En Ninaindhu Ippodhu Poguvaar - வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.