Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 269 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
269ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6
செப்பாடு உடைய,Seppaadu Udaiya - செவ்வைக் குணத்தை யுடையனாய்
திருமால் அவன்,Thirumaal Avan - ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்
தன்,Than - தன்னுடைய
செம் தாமரை கை,Sem Thaamarai Kai - செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள
விரல் ஐந்தினையும்,Viral Aindhinaiyum - ஐந்து விரல்களையும்
கப்பு ஆக மடுத்து,Kappu Aaga Maduthu - (மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து
மணி நெடு தோள்,Mani Nedu Thol - அழகிய நீண்ட திருத் தோள்களை
காம்பு ஆக கொடுத்து,Kaambu Aaga Koduthu - (அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து
கவித்த மலை,Kavitha Malai - தலை கீழாகக் கவித்த மலையாவது
எப்பாடும்,Eppaaduum - எல்லாப் பக்கங்களிலும்
பரந்து இழி,Parandhu Izhi - பரவிப் பெருகா நின்ற
தெள்ளருவி,Thellaruvi - தெளிந்த சுனை நீரருவிகளானவை
இலங்கு மணி முத்துவடம் பிறழ,Ilangu Mani Muthuvadam Pirazha - விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க
குப்பாயம் என நின்று,Kuppayam Ena Nindru - (கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக
காட்சி தரும்,Kaatchi Tharum - காணப்படப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.